நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தனியார் பால் விலைகள் உயர்வு எதிரொலி: ஆவின் பால் தேவை அதிகரிப்பு

தமிழகத்தில் தனியார் பால் விலைகள் உயர்ந்ததன் எதிரொலியாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஆவின் பாலின் தேவை அதிகரித்துள்ளது.

News image

ஆவின் பால் தேவை அதிகரிப்பு

Updated On :22 ஆகஸ்ட் 2022, 6:25 pm IST

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலைகள் உயர்ந்ததன் எதிரொலியாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஆவின் பாலின் தேவை அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் விற்பனையான ஆவின் பாலின் அளவை விட 50 ஆயிரம் லிட்டர் பால் தற்போது அதிகமாக விற்பனையாகிறதாம். இதில் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் அதிகமாக விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுக்க ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் விற்பனை செய்யும் பாலின் அளவு சுமார் 30 ஆயிரம் லிட்டரை எட்டவிருக்கிறது.

தனியார் பால் விலை உயர்வால், இதுவரை தனியார் பாலை வாங்கி வந்த தேநீர் மற்றும் உணவகங்கள் கூட ஆவின் பாலை வாங்கத் தொடங்கிவிட்டன. தனியார் பால் ஒரு லிட்டர் 60 ரூபாயாக இருக்கும் போது, ஆவின் பால் ரூ.40 முதல் ரூ.51 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே சில நூறுகள் முதல் சில ஆயிரங்கள் வரை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆவின் பாலை வாங்கத் தொடங்கிவிட்டனர் தேநீர் மற்றும் உணவக உரிமையாளர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.