தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்ட ஓட்டுநர்: நடத்துநர் பலி

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே, சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க திடிரென பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, பேருந்திலிருந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

News image

கோப்பிலிருந்து..

Updated On :23 ஆகஸ்ட் 2022, 9:16 am

DIN

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே, சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க திடிரென பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, பேருந்திலிருந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

கோரிமேடு பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நாய் குறுக்கே வந்ததைப் பார்த்த ஓட்டுநர், பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, பேருந்தின் படிகட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த நடத்துநர், பேருந்து திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட தடுமாற்றத்தில் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

தலையில் படுகாயமடைந்த நடத்துநர் ராஜேந்திரன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.