சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆகஸ்ட் 27-இல் பள்ளிகள் செயல்படும்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை (ஆக.27) பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதையொட்டி, ஜூலை 28-ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி வேலை நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஜூலை 28-ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் சனிக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com