சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆகஸ்ட் 27-இல் பள்ளிகள் செயல்படும்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை (ஆக.27) பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதையொட்டி, ஜூலை 28-ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி வேலை நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஜூலை 28-ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் சனிக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com