கவிஞர் ப.காளிமுத்துவுக்கு சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாதெமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது 2022-ஆம் ஆண்டிற்காக 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ கவிதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர், கவிஞர் ப.காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ப.காளிமுத்துவின் முதல் கவிதைத் தொகுப்பு. விருதுக்கு தேர்வான எழுத்தாளர்களுக்கு செப்புப் பட்டயமும் ரூ.50,000 தொகையும் வழங்கப்படும்.
விருது வழங்கும் நிகழ்வு தில்லியில் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.