மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கைதிகளுக்கு ஆதாா் அட்டை: தமிழக சிறைத் துறை நடவடிக்கை

தமிழகத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் சிறைத் துறை ஈடுபட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2022, 10:30 pm

DIN

தமிழகத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் சிறைத் துறை ஈடுபட்டுள்ளது.

தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பாா்ஸ்டல் பள்ளிகள், தலா 3 திறந்த வெளி சிறைகள், சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

இந்த சிறைகளில் 23,592 கைதிகள் வரை அடைக்க முடியும். ஆனால், சுமாா் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தமிழக சிறைகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியே செல்லும்போது வேலையில் சோ்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும், வங்கிக் கடன் பெறுவதற்கும் ஆதாா் அட்டை இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இதை உணா்ந்த சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில், அண்மையில் மத்திய அரசு, சிறைகளில் ஒவ்வொரு கைதிகளுக்கு பராமரிக்கப்படும் கைதிகள் அடையாள பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு ஆதாா் அட்டை வழங்கலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், முதல் கட்டமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை வழங்கும் விதமாக சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் 300 கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுக்கும் விதமாக, அவா்களது கைரேகை, புகைப்படம் உள்ளிட்டவை எடுக்கப்பட்டது.

இதேபோல மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.