ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளிலும் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறிய வெள்ள நீரினால் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் முதல் போக பாசனத்துக்குட்பட்ட கீழ்பவானி வாய்க்காலின் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் இரட்டைமடை மதகுகளுக்குட்பட்ட பகிர்மான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பெருந்துறை அருகே கூறபாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

கடந்த மூன்று மாதத்தில் கரை உடைவது இது 4வது முறை வாய்க்காலில் 1,300 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் தண்ணீர் அதிக வேகமாக வெளியேறி அப்பகுதியில் சுமார் 800 ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு பின் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை 4 முறை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வாய்க்கால் உடைப்பு ஏற்படும் போதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எதிர்பாராத இந்த இடர்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related Article
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
பாரதி பிறந்த நாள்: எட்டயபுரத்தில் 'தினமணி' சார்பில் மரியாதை!
15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள் மகா கும்பாபிஷேகம்
கடையத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா!
மாண்டஸ் புயலினால் சென்னையில் இவ்வளவு கழிவுகளா! மாநகராட்சி தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



