தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பெருந்துறை அருகே வாய்க்கால் உடைப்பு: 800 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிப்பு!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளிலும் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறிய வெள்ள நீரினால் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. 

News image
Updated On :11 டிசம்பர் 2022, 1:07 pm IST

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளிலும் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறிய வெள்ள நீரினால் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

Story image

இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் முதல் போக பாசனத்துக்குட்பட்ட கீழ்பவானி வாய்க்காலின் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் இரட்டைமடை மதகுகளுக்குட்பட்ட பகிர்மான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பெருந்துறை அருகே கூறபாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

Story image

கடந்த மூன்று மாதத்தில் கரை உடைவது இது 4வது முறை வாய்க்காலில் 1,300 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் தண்ணீர் அதிக வேகமாக வெளியேறி அப்பகுதியில் சுமார் 800 ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு பின் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை 4 முறை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வாய்க்கால் உடைப்பு ஏற்படும் போதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

Story image

எதிர்பாராத இந்த இடர்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Article

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

பாரதி பிறந்த நாள்: எட்டயபுரத்தில் 'தினமணி' சார்பில் மரியாதை!

15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள் மகா கும்பாபிஷேகம்

கடையத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா!

மாண்டஸ் புயலினால் சென்னையில் இவ்வளவு கழிவுகளா! மாநகராட்சி தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.