நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 12:57 pm IST

பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இதனால் திருவள்ளூரிலிருந்து பூண்டி வழியாக செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் பகுதியில் மாண்டஸ் புயல் மழையால் இந்த 2 நாள்களாக தொடர்ந்து பெய்ததால் ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்களில் நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகிறது. 

இந்த மழையால் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாய்,கிருஷ்ணா கால்வாய்களில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை 2960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதோடு நீர்வரத்து கால்வாய்களில்  நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி காலையில்  1150 கன அடியிலிருந்து 10000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இதனால், திருவள்ளூரியிலிருந்து பூண்டி வழியாக செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதேபோல் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை பாலமும்,செய்யூர் தரைப்பாலமும் மூழ்கியதால் போக்குவரத்து தடை உள்ளசெய்யப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பூண்டி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.