பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் திருவள்ளூரிலிருந்து பூண்டி வழியாக செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் பகுதியில் மாண்டஸ் புயல் மழையால் இந்த 2 நாள்களாக தொடர்ந்து பெய்ததால் ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்களில் நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகிறது.
இதையும் படிக்க: பாரதி பிறந்த நாள்: எட்டயபுரத்தில் 'தினமணி' சார்பில் மரியாதை!
இந்த மழையால் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாய்,கிருஷ்ணா கால்வாய்களில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை 2960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதோடு நீர்வரத்து கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி காலையில் 1150 கன அடியிலிருந்து 10000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையும் படிக்க: ஜிகர்தண்டா-2 டீசர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
இதனால், திருவள்ளூரியிலிருந்து பூண்டி வழியாக செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதேபோல் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை பாலமும்,செய்யூர் தரைப்பாலமும் மூழ்கியதால் போக்குவரத்து தடை உள்ளசெய்யப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பூண்டி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.