தமிழகத்தில் 7 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால், இரண்டு நாள்களுக்கு (டிச.12, 13) மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்கள் அனைத்திலும் மாலை 4 மணிவரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.