கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 
கொசஸ்தலை ஆறு (கோப்புப் படம்)
கொசஸ்தலை ஆறு (கோப்புப் படம்)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

வெள்ளப்பெருக்கால், தண்ணீர் வர வாய்ப்புள்ள பள்ளமான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இன்று இரவு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.  இதனால், கொசஸ்தலை ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com