

சென்னையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் அவரச செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிப்பதற்காக கமல்ஹாசன் தலைமையிலான அவசர நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 18ம் தேதி (ஞாயிறு) மதியம் 12 மணி அளவில் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.