காங்கிரஸ் எம்.பி. சு. திருநாவுக்கரசருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப் படி தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன்.
கடந்த இரண்டு நாட்களாக என்னை நேரில் சந்தித்வர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.