மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image

நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அரசாணை வெளியீடு

Updated On :27 ஜனவரி 2022, 6:26 pm IST


சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களாக ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொள்முதல் செய்து, சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

விவசாயிகளின் வருவைய அதிகரிக்கவும், சிறு தானியங்களின் மதிப்பைக் கூட்டவும், இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக  இத்திட்டததை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.