பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தேங்காய்க்கு உரிய விலை இல்லை! 145 மரங்களை வெட்டி, விவசாயி வேதனை

தஞ்சாவூரில் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் 145 ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை மரங்களை வெட்டி சாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயி ஒருவர் வேதனை அடைந்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:13 pm IST

உரிய விலை இல்லாததால், 40 ஆண்டு காலமாக பெற்ற பிள்ளையை போல் வளர்த்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயின் வேதனை குறித்து விளக்குகிறது இந்த செய்தி...

"பெற்ற பிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது" என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாயிகளை இன்றளவும் கைவிடாமல் தென்னைகள் வாழவைத்து வருகின்றன. இந்நிலையில் தென்னம்பிள்ளையும் தன்னை கைவிட்டு விட்டதாக 40 ஆண்டு காலம் பெற்ற பிள்ளை போல் வளர்த்த சுமார் 145 தென்னை மரங்களை வெட்டி மாற்று பயிருக்கு தயாராகி வருகிறார் தஞ்சை சேர்ந்த விவசாயி.

Story image

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருப்பந்தூர்த்தியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவர் கடந்த 40 ஆண்டுகளமாக தென்னை சாகுபடியில் மேற்கொண்டு வருகிறார்.  

இந்நிலையில் இளநீர், தேங்காய், மற்றும் கொப்பரை ஆகியவற்றிற்கு உரிய விலை இல்லாததால் போதிய வருமானம் இல்லை என இரண்டு  ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்ட 145 தென்னை மரங்களை வெட்டி  அப்புறப்படுத்தி வருகிறார்.  

மேலும் விவசாயி ராமலிங்கம் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு  தேங்காய் இரண்டு  ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் அப்போது வெட்டுக்கூலி 50 பைசா இருந்தால் போதிய லாபம் கிடைத்தது.  ஆனால் தற்போது வெறும் 145 தேங்காய் 800 ரூபாய்க்கு,  அதாவது ஒரு தேங்காய் 5.50 காசுக்கு  விற்கப்பட்டாலும் போதிய லாபம் இல்லை, உர விலை உயர்வு, வெட்டு கூலி தற்போது 50 ரூபாய் அனைத்தும் உயர்ந்துள்ளது.

சந்தையில் ஒரு இளநீர் 50 ரூபாய்க்கும், தேங்காய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுவதாகும். ஆனால் அதை விளைவிக்க கூடிய விவசாயிகள் எங்களுக்கு ஒரு தேங்காயின் விலை ஐந்து ரூபாயில் விலை அடங்கிவிடுகிறது.

இதனால் தங்களுக்கு உரிய லாபம் இல்லாமல் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார். தென்னைக்கு செலவு செய்யக்கூடிய தொகை கூட தங்களுக்கு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயி, தன் பிள்ளையை போல் 40 ஆண்டு காலம் வளர்த்த தென்னையை மனமில்லாமல் வெட்டி வருவதாகவும், இதனால் இரவு நேரங்களில் உறக்கம் கூட வருவதில்லை என அவர் தெரிவிக்கிறார்.

இதேபோல், தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை இல்லை என கடந்த 25ஆம் தேதி தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.