திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
திருவண்ணாமலையில் வேலூா் சாலையில் புதிதாக அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு 8 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- ஷின்சோ மறைவு: தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து
இந்த நிலையில் அண்ணா நுழைவாயிலையும், கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். முன்னதாக கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியையும் அவர் தொடக்கிவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.