ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை இணைந்து ஈடிசியா அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட உணவு உற்பத்தியாளர்களும், உணவு வணிகர்களும் பயன்பெறும் வகையில் மூன்று நாள் லேபிள் மேளா நிகழ்ச்சி துவங்கியது. சங்கத் தலைவர் திருமூர்த்தி, செயலாளர் ராம்பிரகாஷ் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உணவு சார் உற்பத்தி லேபிள்களில் உள்ள விவரங்களை சரி செய்யவும், சரியான விவரங்கள் அடங்கிய லேபிள்களை வடிவமைப்பதற்கும், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள லேபிள் விதிகள் குறித்து தெரிந்துகொள்ளவும் இந்த மூன்று நாட்களிலும் நடைபெறும் லேபிள் மேளா மிகவும் உறுதுணையாக இருக்கும். லேபிள்கள் சட்டத்தில் பல புதிய திருத்தங்களை மத்திய அரசு கடந்த ஜனவரியில் கொண்டு வந்தது.
இது குறித்து விழிப்புணர்வு உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளிடம் இல்லை. சைவ மற்றும் அசைவ பொருட்களுக்கு தகுந்த மாதிரி லேபிள்கள் வடிவமைக்கப்பட வேண்டும். லேபிள்கள் பொருள்களின் எடை அல்லது கொள்ளளவுக்கு ஏற்ப இருக்க வேண்டும் உணவுப் பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளில் மீது நுகர்வோருக்கு நன்கு தெரிந்த அளவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் எடை அளவு அல்லது எண்ணிக்கை குறிப்பிடவேண்டும்.
இதையும் படிக்கலாம்: ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார் கோத்தபய!
என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது அதன் ஊட்டச்சத்து விபரங்கள் தயாரிக்கப்பட்ட தேதி பயன்படுத்த இறுதி தேதி போன்றவைகள் பாக்கெட்டில் சரியாக பதியப்பட வேண்டும். உணவுப் பொருட்களைப் பாக்கெட் செய்ய100 மைக்ரான் தரத்திலான பிளாஸ்டிக் பேப்பர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதே போன்று குறிப்பிட்ட தரத்தில் உள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மட்டுமே உணவுப் பொருள் விற்பனையில் பயன்படுத்த வேண்டும்.
இந்த பாக்கெட் மற்றும் லேபில் தரநிர்ணயம் பிஸ்கட் கேக் உட்பட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும் சாதனமாக லேபிள்கள் மற்றும் பாக்கெட்டுகளில் தங்கள் விருப்பம்போல் உற்பத்தியாளர்கள் பல வண்ணங்களிலும் பல அளவுகளில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குடிசைத்தொழில் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு லேபிள் குறித்து புதிய சட்ட விதிகள் தெரியவில்லை அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல் ஒரு நாளைக்கு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வியாபாரிகள் லைசன்ஸ் பெற வேண்டும். உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். அதற்கு கீழ் வர்த்தகம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டல்கள் டீக்கடைகள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. இந்த பயன்படுத்திய எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை வாங்கிக் கொள்கிறது. இது குறித்தெல்லாம் இந்த மூன்று நாள் லேபிள் மேளாவில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடம் பதித்த தவெக

30 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியைக் கைப்பற்றிய திமுக! 4,627 வாக்குகளில் வீழ்ந்தாா் வி.ஜெயராமன்

பாபநாசம் தொகுதியில் பின்னடைவிலிருந்து முன்னேறி வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

துறையூா் தொகுதியில் தவெக வேட்பாளா் எம். ரவிசங்கா் வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


