எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு,
'அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் நேற்று முன்தினம் எங்களுக்குக் கிடைத்தது. அவரது கடிதம் பரிசீலனையில் உள்ளது. ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் கடிதத்தைத் தவிர, வேறு எந்த கடிதமும் வரவில்லை' என்று தெரிவித்தார்.
பின்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்து பதில் அளித்த அவர்,
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மத்திய உள்துறைக்கோ, குடியரசுத் தலைவருக்கோ மத்திய அமைச்சரவைக்கோ அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழக ஆளுநர் அதை செய்ய மறுக்கிறார். இதன்மூலமாக அவர் தமிழக மக்களைத் தான் புறக்கணிக்கிறார்.
நீட் மசோதாவை அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார்கள். அது உள்துறைக்கு சென்று சேர்ந்ததா எனத் தெரியவில்லை' என்றார்.
இதையும் படிக்க | பேரவை செயலகத்துக்கு ஓபிஎஸ் கடிதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

