மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓபிஎஸ் கடிதம் மீதான நடவடிக்கை என்ன? - அப்பாவு பதில்!

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

News image
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
Updated On :14 ஜூலை 2022, 7:48 am

DIN

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு,

'அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் நேற்று முன்தினம் எங்களுக்குக் கிடைத்தது. அவரது கடிதம் பரிசீலனையில் உள்ளது. ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் கடிதத்தைத் தவிர, வேறு எந்த கடிதமும் வரவில்லை' என்று தெரிவித்தார். 

பின்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்து பதில் அளித்த அவர், 

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மத்திய உள்துறைக்கோ, குடியரசுத் தலைவருக்கோ மத்திய அமைச்சரவைக்கோ அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழக ஆளுநர் அதை செய்ய மறுக்கிறார். இதன்மூலமாக அவர் தமிழக மக்களைத் தான் புறக்கணிக்கிறார். 

நீட் மசோதாவை அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார்கள். அது உள்துறைக்கு சென்று சேர்ந்ததா எனத் தெரியவில்லை' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.