கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புத் துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் உறுதித்தன்மை, நீர் வரத்து, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்துவர், அவர்களுக்கு துணையாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவும் ஆய்வு நடத்தும்.
அதன்பேரில் மத்திய நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக தரப்பு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி செயற் பொறியாளர் எம்.குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அணைப் பகுதிக்குச் சென்றனர்.
பிரதான அணை, பேபி அணை, நீர் கசியும் சீப்பேஜ் வாட்டர் அளவு, நீர் வழிப்போக்கிகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வுகள் முடிந்த பிறகு குமுளி 1 ஆம் மைல் என்ற இடத்தில் உள்ள மத்திய கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்தியது பற்றி ஆலோசனை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்டோா் காயம்

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கி வைத்து விற்ற தந்தை, மகன் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


