தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் இந்தியாவுக்கே பெருமை: அமைச்சர்

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

News image

அமைச்சர் மெய்யநாதன் (கோப்புப் படம்)

Updated On :24 ஜூலை 2022, 5:30 am

DIN


செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

கிராமங்களின் எல்லா இடங்களிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்திகள் சென்று சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டத் தொடர் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் போட்டிகளில் நடு முழுவதிலுமிருந்து 1,400 வீரர்கள் பங்கேற்கின்றனர். 

இதனை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கிராமங்களில் மூலை முடுக்கு வரைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தகவல்கள் சென்று சேர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள அனைவரும் செஸ் விளையாட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.