விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விடுமுறை நாள்களில் வகுப்புகள் கூடாது: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளி நாள்கள் தவிர விடுமுறை நாள்களில் வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2022, 5:21 am

DIN

பள்ளி நாள்கள் தவிர விடுமுறை நாள்களில் வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல் அல்லாமல் வழக்கமான முறையில் பள்ளிகள் இயங்கப்படும் என்றும் அதுபோல சனிக்கிழமை வகுப்புகள் இயங்காது, விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், சனிக்கிழமை சில பள்ளிகளில் வகுப்புகள் இயங்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. 

விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது, பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.