முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஜியோ விண்ணப்பத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% உயர்வு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

News image

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 11:05 pm IST

புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீடாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் சேவைப் பிரிவான 'ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்' தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49 வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் பிராட்பேண்ட், தூய ஆற்றல் மற்றும் நுகர்வோர் வணிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை வெளியிட்டதும், பங்குகளின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1.31 சதவீதம் உயர்ந்து ரூ. 1,326.55 ஆகவும் வர்த்தகத்தின் போது, ​​இது 2.75 சதவீதம் உயர்ந்து ரூ. 1,345.45 ஐ எட்டியது.

நிஃப்டி-யில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 1,309.50 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில், வர்த்தக நேரத்தின் போது நிறுவனத்தின் பங்குகள் 2.70 சதவீதம் உயர்ந்து ரூ. 1,344.90 ஐ எட்டியது.

இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 23,275.96 கோடி அதிகரித்து ரூ. 17,95,158.92 கோடியாக உயர்ந்தது.

ஐபிஓ மூலம் சுமார் ரூ. 37,700 கோடி திரட்டப்படலாம் என்றும், இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Summary

Shares of Reliance Industries ended over one per cent higher on Monday.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.