சென்னை: அரசு போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய பேச்சுவார்த்தை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3-ல் நடைபெறுகிறது. சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடமாக புதிய ஒப்பந்தம் போடுவது தள்ளிப்போனது.
இந்நிலையில் 14-வது ஊதிய பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3-ல் நடைபெறுகிறது.