சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, பழம்பெரும் இயக்குநருமான வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று விருதை வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து முரசொலி அலுவலகம், கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்த உள்ளார்.
இதையும் படிக்க | கச்சத்தீவு: ஸ்டாலின் கேட்டதும் கருணாநிதி சொன்னதும்!