பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த காரில் 3 குழந்தைகள் இன்று விளையாடியுள்ளனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் 3 குழந்தைகளும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதில் நாகராஜன் மகள் நித்திரை(7), மகன் நிதிஷ்(5), சுதாகர் மகன் கபிலன்(4) ஆகிய 3 பேரும் மூச்சுத் திணறி பலியாகினர். இந்த சம்பவம் பணகுடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.