நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் புதிதாக 476 பேருக்கு கரோனா: சென்னையில் 221

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 476 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2022, 2:36 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 476 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 332 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

அதில், இன்று புதிதாக 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,58,445-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல வாரங்களுக்கு பின்னர் கரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் மொத்த உயிரிழப்பு 38,026 ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,18,481-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171-ல் இருந்து 221-ஆக அதிகரித்துள்ளது.  செங்கல்பட்டு 95, கோவை 26, நீலகிரி 23, காஞ்சிபுரம் 21, கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 20 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல வாரங்களுக்கு பின்னர் கரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.