பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு கட்டாயம் வாருங்கள்; பிரச்னைகளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக்குழு கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் ஒன்றும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், திட்டமிட்டபடி பொதுக்குழு - செயற்குழு நடக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல, பொதுக்குழுவில் பங்கேற்போம் என எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.