அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக திங்கள்கிழமை அதிமுக தலமைமை அலுவலகத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஒற்றைத் தலைமை பிரச்னை அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இருவரது பெயரும் இல்லாமல் முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிா்வாகிகள் கூட்டம் என அதிமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.
தலைமைக் கழக நிா்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. தலைமைக் கழக நிா்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய அறிவிப்பு அதிமுகவினரையும், அதன் நிா்வாகிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக அவசர ஆலோசனை நடத்திவிட்டு அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள தலைமைக் கழக நிா்வாகிகள் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை நியமிப்பதும் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்த நீக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க | இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது: ஓ.பன்னீர்செல்வம்
சென்னையில் இன்று திங்கள்கிழமை நடைபெறும் கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பெருமளவிலான அதிமுகவினர் வருகை தந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

2-ம் நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: மக்கள் மகிழ்ச்சி!

காதலருடன் நடிகை பிரிகிடா சாகாவுக்கு நிச்சயதார்த்தம்!
விடியோக்கள்

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK

வெளியானது டிரெயின் படத்தின் டீசர்!



