உங்களில் ஒருவன் நூலைப் படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' நூல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டது. இதனைப் படித்து பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உத்தரகண்ட் முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இதுபற்றிய அவரது ட்விட்டர் பதிவு:
"உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!"