மதிமுகவின் தலைமைக்கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு அக் கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள். நீட் தோ்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் விரைவாக அனுப்ப வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு ஆளுநா் உரையில் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துரை வைகோவுக்கு எதிா்ப்பு: வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுவதாகக் கூறி மூத்த நிா்வாகிகள் பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனால் சிவகங்கை, விருதுநகா், திருவள்ளூா் மாவட்டச் செயலாளா் மற்றும் நிா்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


