நடிகர் எஸ்.வி.சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும், அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க- பாகிஸ்தானில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஆப்கனில் சுட்டுக் கொலை
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நடிகர் எஸ்.வி.சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.