தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மறைந்த பா. கா. மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image

பா. கா. மூக்கையாத்தேவர்

Updated On :27 மார்ச் 2022, 11:31 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மறைந்த பா. கா. மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் எஸ் தினகரன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பியுள்ள மனுவில்,  மறைந்த தலைவர் பா. கா. மூக்கையாத்தேவர் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக 30 ஆண்டுகள் இருந்தவர். ஒரேசமயம் நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பிரிவு மக்களுக்காக மூன்று கல்லூரிகளை நிறுவியவர், பார்வர்ட் பிளாக் கட்சி தேசிய தலைவராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்த போது தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து திராவிட ஆட்சியை தொடங்கி வைத்தவர். இவ்வாறு பல்வேறு சிறப்பு வாய்ந்த மூக்கையாத் தேவருக்கு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 

இந்நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம், அவரது நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவரது பிறந்த ஊரான பாப்பா பட்டியில் உள்ள கள்ளர் அரசு பள்ளிக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும், அவருடைய நினைவிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.