கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகம் முழுவதும் +2 தேர்வுகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
சென்னை அசோக் நகர் மேல்நிலைப்பள்ளி
Updated On :5 மே 2022, 4:17 am

DIN

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தோ்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Story image

மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வறையில் அமர்வதால், முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டு தேர்வறைக்குள் மாணவர்கள் சென்றனர். தொடர்ந்து, 9.55 மணிக்கு இரண்டாம் மணி அடிக்கப்பட்டவுடன், அறைக் கண்காணிப்பாளா் வினாத்தாள் உறைகளை மாணவா்களிடம் காண்பித்து, இரு மாணவா்களிடம் கையெழுத்து பெற்று, உறைகள் பிரித்து கேள்வித் தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்தனர்.

Story image

காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தோ்வுகள் நடைபெறும். தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Story image

மேலும், பொதுத் தோ்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுதத் தடை விதிக்கப்படும். தோ்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 28 வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.