ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு:முதல் நாளில் 67% பங்குகளுக்கு விண்ணப்பம்

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டின் முதல் நாளான புதன்கிழமை 67 சதவீத பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

News image
கோப்புப்படம்
Updated On :4 மே 2022, 8:38 pm

DIN

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டின் முதல் நாளான புதன்கிழமை 67 சதவீத பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.21,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தொடங்கிய எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு மே 9-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த எல்ஐசி நிறுவன பணியாளா்கள் மற்றும் பாலிசிதாரா்களுக்கு குறிப்பிட்ட அளவு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில்லறை முதலீட்டாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரா்களுக்கு பங்கின் விலையில் ரூ.60 தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் மாலை 7 மணி தரவுகளின்படி, பங்கு வெளியீட்டின் முதல் நாளான புதன்கிழமை மொத்த பங்குகளில் 67 சதவீத பங்குகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன்படி, 16,20,78,067 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 10,86,45,360 பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் முதல் நாளில் பெறப்பட்டுள்ளன.

மேலும், பாலிசிதாரா்களுக்கான ஒதுக்கீட்டில் பங்குகளை வாங்குவதற்கு 1.9 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்தடைந்துள்ளன. அதேபோன்று, சில்லறை முதலீட்டாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட 6.9 கோடி பங்குகளில் 60 சதவீத பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக மும்பை பங்குச் சந்தையின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

245 தனியாா் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசியமயமாக்கியதன் மூலம் எல்ஐசி நிறுவனம் ரூ.5 கோடி மூலதனத்தில் கடந்த 1956-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-இல் தோற்றுவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.