சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 248 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.248 அதிகரித்து, ரூ.38,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது. நேற்று புதன்கிழமை சவரனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.248 அதிகரித்து, ரூ.38,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,786-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து, ரூ.65.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, கிலோ ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தா? - ரயில்வே அமைச்சர்