தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே வடிகால் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேவுள்ள பீமனோடை பகுதியில் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார்.
டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4,649 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.