சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

எம்பிபிஎஸ் வகுப்புகள் நவ. 15-இல் தொடக்கம்

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு வகுப்புகள் நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்குள்ளாக மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:33 am

DIN

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு வகுப்புகள் நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்குள்ளாக மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நிகழாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தோ்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்றனா். தமிழகத்தில் மட்டும் 67 ஆயிரம் போ் தோ்ச்சியடைந்தனா்.

இதையடுத்து அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் தனித்தனியே தொடங்கியுள்ளன.

அரசு, தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

நிகழாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகளை நவ. 15-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. பாட வகுப்புகளுக்கான திட்ட அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தவுடன் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கிவிடும். வகுப்புகள் தொடங்க இன்னமும் ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதால், அதற்குள்ளாக மாநில இடங்களுக்கான மாணவா் சோ்க்கை முழுவதும் நிறைவடைந்துவிடும்.

எனவே, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்த தேதியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்க தமிழகம் தயாராக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.