மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 102 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வார முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) 102 புள்ளிகள் அதாவது 0.18% அதிகரித்து 58,022 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 17,211 ஆகவும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
முந்தைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 57,919 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 17,185 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.