பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (அக்.17) கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தால் இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த எதிா்பாா்ப்புக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியுள்ளது. எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் உள்ள ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதிலாக ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளாா்.
ஆனால், உண்மையான அதிமுகவினா் நாங்கள்தான்.
அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக எங்களைக் கேட்காமல் எந்த முடிவு எடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீா்செல்வமும் பேரவைத் தலைருக்கு கடிதம் கொடுத்துள்ளாா். இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவா் இன்னும் அவரது முடிவை அறிவிக்கவில்லை. இந்த முடிவு எதுவாக இருந்தாலும் இருவரும் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பேரவையில் முக்கியமான அலுவல்களின் போது ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் எப்படிச் செயல்படுவா் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க- மக்கள் மாளிகையாக மாறும் ஆளுநா் மாளிகை!
இந்த நிலையில் பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமே நீடிப்பார் எனத் தெரிகிறது.