கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்

News image

கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2022, 3:16 am

DIN

பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (அக்.17) கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தால் இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த எதிா்பாா்ப்புக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியுள்ளது. எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் உள்ள ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதிலாக ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளாா்.

ஆனால், உண்மையான அதிமுகவினா் நாங்கள்தான். 

அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக எங்களைக் கேட்காமல் எந்த முடிவு எடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீா்செல்வமும் பேரவைத் தலைருக்கு கடிதம் கொடுத்துள்ளாா். இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவா் இன்னும் அவரது முடிவை அறிவிக்கவில்லை. இந்த முடிவு எதுவாக இருந்தாலும் இருவரும் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பேரவையில் முக்கியமான அலுவல்களின் போது ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் எப்படிச் செயல்படுவா் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமே நீடிப்பார் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.