தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சென்னையில் தேவர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை!

தேவர் ஜெயந்தியையொட்டி சென்னையில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது. 

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:33 pm IST

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி சென்னையில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது. 

முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி திமுகவினர் மரியாதை செலுத்தினர். 

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாக இன்று (அக்.30) தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதேபோன்று சென்னை நந்தனத்திலுள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மாநகராட்சி ஆணையர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.