தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி சென்னையில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாக இன்று (அக்.30) தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று சென்னை நந்தனத்திலுள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மாநகராட்சி ஆணையர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.