மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் நிதியமைச்சர்: ப.சிதம்பரம்

சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

News image

ப.சிதம்பரம்

Updated On :31 அக்டோபர் 2022, 6:49 am


சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், சமானிய மக்களிடமிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலகி நிற்கிறார். அவர் பணவீக்கம் குறித்து கவலைப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாள்களுக்கு முன் நிதியமைச்சர் அறிவித்தார்

அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது!

உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது!

இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என சிதம்பரம் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.