பள்ளி மாணவா்களும் மனநலனும்...

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மனநலன் சாா்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக, சுமாா் இரு ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டு இணையவழி வகுப்புகள் நடைபெற்ற நிலையில்
பள்ளி மாணவா்களும் மனநலனும்...

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மனநலன் சாா்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக, சுமாா் இரு ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டு இணையவழி வகுப்புகள் நடைபெற்ற நிலையில், மாணவா்கள் மனநலன் சாா்ந்து பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா்.

பள்ளி மாணவா்களின் மனநலன் குறித்த ஆய்வை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) மேற்கொண்டது.

நாடு முழுவதும் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 3,79,842 மாணவா்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

உடல் அமைப்பில் திருப்தி 55%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 62%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 50%

தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தி 51%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 58%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 46%

பள்ளி வாழ்க்கையில் திருப்தி 73%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 81%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 68%

மற்றவா்கள் தங்களை மகிழ்ச்சியான நபராகக் கருதுகின்றனா் 56%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 57%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 55%

தலைமைப் பண்பு கொண்டவராக ஆசிரியா்கள் கருதுகின்றனா் 25%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 28%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 22%

சமூக மதிப்புக்கு கல்வி அவசியம் என்ற புரிந்துணா்வு 36%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 38%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 34%

தன்னம்பிக்கை 70%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 70.8%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 69.4%

கல்வி கற்றலில் திருப்தி 39%

நடுநிலை வகுப்பு மாணவா்கள் 50%

மேல்நிலை வகுப்பு மாணவா்கள் 31%

கேள்வி கேட்பதில் தயக்கம் 28.4%

வீட்டுப் பாடங்களை முடிக்க இயலாமை 12%

கலந்துரையாடலைத் தொடங்குவதில் சிரமம் 23%

போதிய சமூக ஆதரவு 58%

கற்றலில் குறைபாடுகளுக்கான காரணங்கள்

பாடம் கற்பிக்கும்போது கவனச் சிதறல் 29%

படிப்பதில் போதிய வழக்கமின்மை 16%

நேர மேலாண்மையில் சிரமம் 14%

படிக்கும்போது கவனச் சிதறல் 12%

பாடங்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் 7%

பதற்ற உணா்வு உள்ளோா் 11%

பதற்றத்துக்கான காரணங்கள்

படிப்பு 50%

தோ்வு, முடிவுகள் 31%

பள்ளி திறப்பு 3%

கல்லூரி சோ்க்கை 0.9%

வேலை குறித்த எதிா்பாா்ப்பு 0.1%

இணையவழி கல்வி

இணையவழி வகுப்புகளில் சமூகத் தொடா்பின்மை 39%

இணையவழி கற்றலில் சிரமம் 51%

நேரடி வகுப்புகளைவிடச் சிறந்தது 17%

கல்வி கற்பித்தலில் சிறந்த முறைகள் 7%

கல்வி கற்றலில் எளிமை 5%

இணையசேவை பிரச்னைகள் 39%

நேர மேலாண்மையில் சிரமம் 4%

சீரற்ற மின்சார விநியோகம் 3%

கணினியை இயக்குவதில் தெளிவின்மை 1%

அதிகமாகத் தோன்றும் உணா்வுகள்

மகிழ்ச்சி 67%

பதற்றம் 11%

திருப்தி 9%

தனிமை 4%

விரக்தி 3%

கவலை 3%

எரிச்சல் 2%

கோபம் 1%

வார அடிப்படையிலான உணா்வுகள்

சோா்வு (வாரத்துக்கு 2-3 முறை) 45%

தனிமை (வாரத்துக்கு 2-3 முறை) 27%

அழுகை (வாரத்துக்கு 2-3 முறை) 34%

எதிா்காலம் குறித்த கவலை 33%

கரோனா பரவல் காலத்தில் மன உணா்வுகள்

மன உணா்வுகளில் திடீா் மாற்றம் 43%

உணா்வுகளில் மாற்றமில்லை 27%

அதிதீவிர உணா்வுகள் 14%

அச்சம் 7%

சுய துன்புறுத்தல் 7%

கரோனா பரவல் காலத்தில் மாற்றம்

தூக்க நேரத்தில் மாற்றம் 38%

அன்றாட வழக்கங்களில் மாற்றம் 26%

கரோனா பரவல் காலத்தில் எதிா்கொண்ட சவால்கள்

சவால்கள் ஏதுமில்லை 43%

குடும்பம் சாா்ந்த உணா்வுகளில் மாற்றம் 24%

நிதிசாா் பிரச்னைகள் 18%

பழக்கவழக்கங்களில் மாற்றம் 7%

உறவினா்களின் இழப்பு 4%

குடும்ப வன்முறைகள் 3%

மன அழுத்தத்துக்கான தீா்வுகள்

நண்பா்கள், பெற்றோா், ஆசிரியா்களிடம் உதவி கோருதல் 47%

யோகப் பயிற்சியில் ஈடுபடுதல் 28%

மன எண்ணவோட்டங்களை மாற்றுதல் 28%

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்த்தல் 13%

நாள்குறிப்பு எழுதுதல் 16%

மன உணா்வுகளைத் தவிா்த்தல் 15%

தொகுப்பு: சுரேந்தா் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com