ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- 1 ற்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க- கம்போடியாவில் படகு மூழ்கி ஒருவர் பலி: 20 பேர் மாயம்
ஆனால் நிர்வாகக் காரணங்களால் அத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.