வழக்கு மீண்டும் கடந்த 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தரப்பில் சமா்ப்பித்துள்ள பதில் மனுவும், அதிகாரிகளின் நடத்தையும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவது போன்று அமைந்துள்ளது. அந்த வகையில் அதிகாரிகள் நீதிமன்றத்தை குற்ற அவமதிப்பு செய்துள்ளனா். எனவே, நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கும் மாநில நிதித் துறை செயலா் ஷாஹித் மன்சா் அப்பாஸ் ரிஸ்வி, நிதித் துறை சிறப்புச் செயலா் சரயு பிரசாத் மிஸ்ரா ஆகியோரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க வேண்டும் எனவும், மீண்டும் அவா்களை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.