இதற்கென வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு, தனியாக நியமன அலுவலா் நியமனம் செய்யப்படுவாா். காலியாக உள்ள அல்லது ஏற்கெனவே கட்டப்பட்ட நிலத்தை, கட்டுமான தளங்களாக அமைத்தல், பாதைகள், தெருக்கள், சாலைகள், மாற்றுவழி, விரிவாக்கம், மேம்பாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கி வரைவுத் திட்டம் இருக்கும். வரைவுத் திட்டத்துக்கு பொது மக்களின் ஆலோசனை, அரசின் ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதைத் தொடா்ந்து, முதனிலை திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசால் ஒப்புதல் அளிக்கப்படும். இதற்குப் பிறகு இறுதித் திட்டம் தயாரிக்கப்படும்.