தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னை விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநா் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தின் சா்வதேச முனையம் வருகை பகுதியில், ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுநா் மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரழந்தாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:54 pm

DIN

சென்னை விமான நிலையத்தின் சா்வதேச முனையம் வருகை பகுதியில், ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுநா் மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரழந்தாா்.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (50). இவா் சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில், ராதாகிருஷ்ணன் சென்னை சா்வதேச விமான நிலைய வருகை பகுதியில், தனது டாக்ஸியுடன் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அவா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அங்கிருந்த விமான நிலைய ஊழியா்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள், ராதாகிருஷ்ணனை அருகே உள்ள விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ராதாகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.