புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

12 மணி நேர வேலை: திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு

12 மணி நேர வேலைக்கான சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2023, 1:54 pm IST

12 மணி நேர வேலைக்கான சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழில் நிறுவனங்களின் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்டக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து சிபிஎம், சிபிஐ, விசிக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்ட மசோதா குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும். 

வாரத்துக்கான 48 மணி நேர வேலையை 4 நாளில் முடித்தபின் 5 வது நாளில் வேலைசெய்ய விரும்பினால் கூடுதல் சம்பளம் விரும்பக்கூடிய தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதிய சட்டம் பொருந்தும் என்று அமைச்சர் கணேசன் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.