பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

12 மணி நேர வேலை: திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு

12 மணி நேர வேலைக்கான சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

கோப்புப்படம்

Published On :

12 மணி நேர வேலைக்கான சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழில் நிறுவனங்களின் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்டக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து சிபிஎம், சிபிஐ, விசிக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்ட மசோதா குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும். 

வாரத்துக்கான 48 மணி நேர வேலையை 4 நாளில் முடித்தபின் 5 வது நாளில் வேலைசெய்ய விரும்பினால் கூடுதல் சம்பளம் விரும்பக்கூடிய தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதிய சட்டம் பொருந்தும் என்று அமைச்சர் கணேசன் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.