வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி
Published on
Updated on
1 min read

வடசென்னை அனல்மின் நிலையத்தில்  2வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையின் இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 

இந்நிலையில் 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொதிகலன் சரிசெய்யப்பட்டு இன்று 2-வது அலகில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 

தற்போது அனல்மின் நிலையத்தில் முழுமையாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com