பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒத்திவைப்பு!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 5 ஆம் தேதி  வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்த நிலையில், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com