பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 5-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. இதற்கிடையே மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதாக் முதல்வருடன் ஆலோசனை செய்து புதிய தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.