மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நீண்டநாள் ஆசை... புத்தகத் திருவிழாவுக்கு வந்த மாற்றுத்திறனாளி பெண்!

புத்தகங்களின் மீதும் வாசிப்பின் மீதும் ஆழமான காதலைக் கொண்ட அந்த பெண், எழுந்து உட்காரக் கூட முடியாத 100 சதவிகிதம் மாற்றுத்திறனாளி.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவைப் பார்க்க வேண்டும் என்ற நீண்டகால ஆசையை நிறைவேற்றியுள்ளார் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர். 

புத்தகங்களின் மீதும் வாசிப்பின் மீதும் ஆழமான காதலைக் கொண்ட அந்த பெண், அப்பெண்ணின் பெயர் சுகுணா பன்னீர்செல்வம். 38 வயது. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

கந்தர்வகோட்டை வட்டத்தைச் சேர்ந்த கொத்தம்பட்டி அவரின் ஊர். பெற்றோர் விவசாயிகள். பிறவி மாற்றுத்திறனாளி. இவரது தங்கை சுகந்தியும் இவரைப் போலவே!

ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தபடுக்கையாகிப் போன சுகுணா, வீட்டை விட்டு வெகுதொலைவு வந்து- பெருங்கூட்டத்தைக் கண்டது இன்று தான்!

புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவைப் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசையைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்.

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெக்சர்,  உதவியாளர் சகிதம் செவ்வாய்க்கிழமை பகலில் வந்து அரங்குகளைப் பார்வையிட்டு, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிச் சென்றது மட்டுமல்லாமல், இங்கிருந்த மாவட்ட சிறைக்கான நூல் தானம் செய்யும் அரங்குக்கு இரு புத்தகங்களைக் கொடுத்துச் சென்றார்!

Story image

அறுசுவை விருந்துதான் புத்தகத் திருவிழா எனக் கூறும் சுகுணா, நிறைய படிப்பவரும், கைப்பேசி மூலம் கவிதைகளை எழுதுபவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.