ஆடிப்பெருக்கு விழா நாளை(ஆக.3) என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
மல்லிகைப் பூவின் விலை கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லைப்பூ ரூ.600க்கும், பிச்சிப்பூ ரூ.700க்கும் விற்பனையாகிறது
ஆடிப்பெருக்கு காரணமாக பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.